Saturday 13 April 2019

பள்ளி வாகனங்களில் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய குழு உள்ளதா? பள்ளிக்கல்வித்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

பள்ளி வாகனங்களில் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய குழு உள்ளதா? பள்ளிக்கல்வித்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு 

பள்ளி வாகனங்களில் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய கண்காணிப்பு குழு உள்ளதா என்பது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக பள்ளி வாகனத்தில் உதவியாளர் ஒருவர் இருக்க வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகளை பள்ளி நிர்வாகங்கள் பின்பற்றவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பள்ளி வாகனங்களில் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய கண்காணிப்பு குழு உள்ளதா? என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது .மேலும் ஏப்ரல் 29-ஆம் தேதிக்குள் பள்ளிக்கல்வித்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

No comments:

Post a Comment