Sunday 14 April 2019

நீட் தேர்வு: தேர்வு நுழைவுச் சீட்டு ஏப்ரல் 15-யில் வெளியீடு..!

நீட் தேர்வு: தேர்வு நுழைவுச் சீட்டு ஏப்ரல் 15-யில் வெளியீடு..! 

மருத்துவப் துறையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 5-ஆம் தேதியன்று நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பித்த மாணவர்கள் தங்களது தேர்வறை நுழைவுச் சீட்டினை வரும் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நீட் தேர்வுக்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த நவம்பர் 1-ஆம் தேதி தொடங்கி 30-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதனிடையே, 25 வயதுக்கு மேற்பட்ட பொதுப் பிரிவு மாணவர்களும் நீட் தேர்வில் பங்கேற்கலாம் என தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால டிசம்பர் 7-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. 

இதனைத்தொடர்ந்து, நாடு முழுவதும் இருந்து நீட் தேர்வுக்கு 15 லட்சத்து 19 ஆயிரம் பேரும், இதில், தமிழகத்தில் மட்டும் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2019-20-ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி நுழைவுத் தேர்வு (நீட்) வரும் மே மாதம் 5-ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தேர்விற்கான தேர்வு நுழைவுச் சீட்டினை ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் தங்களுடைய பதிவெண் கொண்டு www.nta.ac.in அல்லது www.ntaneet.nic.in ஆகிய இணையதளங்களில் இருந்து இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த நீட் தேர்விற்கான முடிவுகள் வரும் ஜூன் 5-ஆம் தேதி வெளியிடப்படும்.

 

No comments:

Post a Comment